ஓம் சிவமயம்

சிவசிவ என்னச் சிவகதியாமே



தந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத்

தொந்தி வயிறனைத் தோடணி செவியனை

இந்திர னுக்கரு ளீந்த இறைவனை

மந்திர ரூபனை நான்மற வேனே.

நல்லூரான் திருவடி

 

நல்லூரான் திருவடியை

நான்நினைத்த மாத்திரத்தில்

எல்லாம் மறப்பேனெடி - கிளியே!

இரவுபகல் காணேனெடி.



ஆன்மா அழியாதென்று

அன்றெனக்குச் சொன்னமொழி

நான்மறந்து போவேனோடி - கிளியே!

நல்லூரான் தஞ்சமெடி.



தேவர் சிறைமீட்ட

செல்வன் திருவடிகள்

காவல் எனக்காமெடி - கிளியே!

கவலையெல்லாம் போகுமெடி.



எத்தொழிலைச் செய்தாலென்

ஏதவத்தைப் பட்டலென்

கர்த்தன் திருவடிகள் - கிளியே!

காவல் அறிந்திடெடி.



பஞ்சம்படை வந்தாலும்

பாரெல்லாம் வெந்தாலும்

அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!

ஆறுமுகன் தஞ்சமெடி.



சுவாமி யோகநாதன்

சொன்னதிருப் பாட்டைந்தும்

பூமியிற் சொன்னானெடி - கிளியே!

பொல்லாங்கு தீருமெடி.



கேட்க:
நல்லூரான் திருவடியை பாடியவர்: பொன். கணேசலிங்கம்


Yogaswami's Main Page Next thought

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top